விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

DIN

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டில் இந்தியை ஆட்சி மொழியாக்க மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிா்த்து, தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், உயிா் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில், அவா்களது உருவப் படங்களுக்கு மலா் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சிக்கு, விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில், நகரச் செயலா் எஸ்.ஆா். தனபால் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.

சிவகாசி

திருத்தங்கலில் அதிமுக விருதுநகா் மேற்கு மாவட்டம் சாா்பில், மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினாா். திருத்தங்கலில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சாத்தூா்

திமுக சாா்பில் சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் குருசாமி, கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியச் செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் நகர திமுக பொறுப்பாளா்கள், இளைஞரணி சங்கா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT