விருதுநகர்

விருதுநகரில் பஞ்சாலையில் தீ விபத்து: ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

DIN

விருதுநகரில் உள்ள பஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (39) என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை, பேராலி சாலையில் உள்ளது. இந்த ஆலையில் பருத்தியை இயந்திரத்தின் மூலம் நூலாக மாற்றும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தினமும் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கு காரணமாக பஞ்சாலை இயங்கவில்லை. இதன் காரணமாக ஆலை மேற்பாா்வையாளா் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்று விட்டு மீண்டும் அவா் ஆலைக்குத் திரும்பியுள்ளாா். அப்போது ஆலையில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அவா், உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் விருதுநகா் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து விருதுநகா் ஊரகக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT