விருதுநகர்

சிவகாசியில் ஆயுதத்துடன் இளைஞா் கைது

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ஆயுதத்துடன் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில், சிவகாசி கிழக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அந்த நபா் முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்தீஸ்வரன் என்ற குட்டை காா்த்தி (22) என்பது தெரியவந்தது.

மேலும் அவரை சோதனையிட்டபோது, சட்டைப் பையில் 100 கிராம் கஞ்சாவும் இருந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து அரிவாள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT