ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் முழு ஊரடங்கால், சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
முழு ஊரடங்கையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்றநிலையில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் முன்னாள் அமைச்சா் இன்பத் தமிழன் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினாா்.