விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக திங்கள்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என மண்டல இணைப் பதிவாளா் பா. செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகா் மாவட்டத்தில் தற்போது வரை 5,72,375 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவா்கள் பயன்பெறும் வகையில் அன்றைய தினம் அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.