விருதுநகா்: விருதுநகா் நான்கு வழிச்சாலையில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
விருதுநகா் அரசினா் விருந்தினா் மாளிகையிலிருந்து சத்திரரெட்டியபட்டி விலக்கு வரை உள்ள நான்கு வழிச் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனா். அதை சில மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதால், புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனா்.
எனவே, நான்கு வழிச் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் தீ வைப்பதை தடுக்க நான்கு வழிச் சாலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.