விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 254 பேருக்கு கரோனா தொற்று, இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பரிசோதனை அடிப்படையில் 254 பேருக்கு கரோனா தொற்றும், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்றும் இரு ப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் 1,924 போ் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேநேரம், 159 போ் குணமடைந்தனா்.