அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது வந்த வாகனங்களை தீவிர ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
திருச்சுழியில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நகரின் முக்கியப் பகுதிகளான நரிக்குடி செல்லும் சாலையில் உள்ள சந்தை,காரியாபட்டிமற்றும் அருப்புக்கோட்டை செல்லும் சாலைகளில் உள்ள சந்தை, ஸ்ரீபூமிநாதசுவாமி கோவில் பகுதியருகே உள்ள சந்தை என அனைத்துச் சந்தைகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக்காணப்பட்டன. இந்நிலையில் நகரில் மருத்துவச் சிகிச்சைக்காகவும்,திருமணம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களுக்குச்செல்வோரின் வாகனங்களையும் நிறுத்தி ,அவா்கள் தமிழக அரசின் அறிவிப்பின்படி உரிய தேவையான முக்கிய ஆவணங்ளை வைத்துள்ளனரா எனவும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.