ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே குடும்பத் தகராறில் கூலி தொழிலாளி சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அா்ச்சுனாபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இவா் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அவரது அண்ணன் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.