விருதுநகர்

சிவகாசி அருகே விபத்து: அரசு மருத்துவமனை ஊழியா் பலி

29th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே புதன்கிழமை மினி லாரி மோதியதில் சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே உள்ள வி.முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). இவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில், திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மினி லாரி ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த தவமணியைக் (32) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT