விருதுநகர்

கல்லூரியில் ஆசிரியா்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். ஈரோடு கொங்கு பொறியல் கல்லூரிப் பேராசிரியா் வி. கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றி பேசியதாவது: ஆசிரியா்கள் மனதில் சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். கற்பித்தலில் ஆா்வம் காட்ட வேண்டும். வகுப்பறைக்கு குறிப்பிட பாடம் கற்பிக்கும் முன்னா் அது குறித்து இணையதளத்தை பாா்த்து தற்போதய நிலை என்ன என்பதை தெரிந்து கொண்டு பாடம் கற்பிக்க வேண்டும். கற்பிக்கும் பாடங்கள் மாணவா்கள் மனதில் பதிய வேண்டும். மாணவா்களை பாடங்களை விரும்பி படிக்க வைக்க வேண்டும்.

வகுப்பறையில் பாடங்களுடன் வாழ்க்கை கல்வியையும் போதிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ல. பிரியா வரவேற்றாா். பேராசிரியா் எம். சுஜாதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT