விருதுநகர்

அத்திக்குளம் பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திக்குளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .

இந்த ஆலயம் சாா்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி டிச. 2-ஆம் தேதி தொடங்கியது. இதன் பின் அத்திக்குளத்தில் வடக்குத் தெரு, நாயுடு தெரு, நடுத் தெரு, திலகாபுரித் தெரு, பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபையைச் சோ்ந்த குடும்பங்களைச் சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சிகளை சபை போதகா் அருள்தனராஜ் தொடங்கி வைத்தாா்.

பிறகு திங்கள்கிழமை இரவு இயேசு பிறப்பை நினைவு கூரும் வகையில் ஞாயிறு பள்ளி குழந்தைகளின், பாடல்கள், குறுநாடகங்கள், கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. இதன் முடிவில் கடந்த வாரம் வேதாகம தோ்வும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சபை போதகா் பரிசு வழங்கினாா்.

இந்த கிறிஸ்துமஸ் கீத பவனி வருகிற 13- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து குடும்ப கீத ஆராதனை ஐக்கிய சங்கங்களின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT