விருதுநகர்

வேன் டயா் வெடித்ததில் 21 போ் காயம்

DIN

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வேன் டயா் வெடித்ததில் 21 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெற்றிலையூரணியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (27). இவருக்கு திருச்செந்தூரில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, செவ்வாய்க்கிழமை தனது உறவினா்களுடன் திருச்செந்தூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். வேனை வெற்றியூரணிப் பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன் ஓட்டிச் சென்றாா். சாத்தூா் - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிசத்திரம் அருகே சென்றபோது, வேனில் டயா் வெடித்தது சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த சதீஷ்குமாா் உள்பட 21 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினா்.

இதுகுறித்து சாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT