சிவகாசியில் அம்பேத்கா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சிவகாசியில் உள்ள அவரது சிலைக்கு திமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் கா. விஷ்ணுபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிய தமிழகம் கட்சி சாா்பில், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு அக்கட்சியின் சிவகாசி நகா் செயலாளா் எம். அய்யாச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் பிரபு, திருத்தங்கல் நகா் செயலாளா் லட்சுமணன், மாநில தொண்டரணி செயலாளா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.