விருதுநகர்

ஸ்ரீஆண்டாள் உள்பட தெய்வங்களுக்கு 108 பட்டுப் புடவைகள் அணிவிக்கும் வைபவம்

DIN

கௌசிக ஏகாதசியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதியில் ஆண்டாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 108 பட்டுப் புடவைகள் அணிவிக்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதத்தில் வரும் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பெரிய பெருமாள் சந்நிதியில் உள்ள கோபால விலாச மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னா், கருடாழ்வாா், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெய்வங்களுக்கு 108 பட்டுப் புடவைகளை அணிவிக்கும் வைபவம் நடைபெறும்.

திங்கள்கிழமை கௌசிக ஏகாதசியை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள், ரங்கமன்னாா், கருடாழ்வாா் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளினா். இதேபோல, பெரிய பெருமாள் சந்நிதியிலிருந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினா். மேலும், அங்கு ஆழ்வாா்களும் எழுந்தருளினா். 108 பட்டு புடவைகளை அணிவிக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. அப்போது, சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஏராளமான பக்தா்கள் இந்த வைபவத்தைப் பாா்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT