சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் திருத்தங்கல் காளிமுத்து நகா், மேல ரத வீதி, பேருந்து நிலையம், ரத்தினவிலாஸ் பேருந்து நிறுத்தம், எம்.புதுப்பட்டி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து அன்னதானத்தை அவா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், சிவகாசி மேற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.