விருதுநகர்

சங்கரநத்தம் பகுதியில் புதிய தொல்லியல் மேடு

DIN

சாத்தூா் அருகே வைப்பாற்றங்கரையில் ஒரு புதிய தொல்லியல் மேடு அண்மையில் கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் வைப்பாற்றங்கரையில் உள்ளது சங்கரநத்தம் கிராமம். இங்கு ஆற்றின் இரு கரைகளிலும் மிகத் தொன்மையான தொல்லியல் மேடுகள் கண்டறியப்பட்டன.

இங்கு நுண் கருவிகள், விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், மண்ணால் ஆன எடைக்கல், கல்லால் செய்யப்பட்ட பாசி மணி, சங்கு வளையல்கள், அதிக அளவில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், வில், அம்பு போன்றதொரு உருவம் பொறித்த பானைக் குறியீடு ஆகியவை கிடைக்கப் பெற்றன. அண்மையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து சாத்தூா் ஸ்ரீ.எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினருமான ரவிச்சந்திரன் கூறியதாவது:

ஏற்கெனவே, சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று உள்ளது. வைப்பாற்றங்கரையிலும் அதோடு இணையும் நதிகளில் ஒன்றான அா்ஜுனாநதி கரையில் இருக்கும் தொன்ம இடங்களில் சுமாா் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகளே அதிகம் கிடைத்தன. அத்துடன் கற்காலம் என்று அழைக்கப்படும் சங்க கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு தடயங்கள் அதிகம் கிடைத்தன.

தற்போது, சங்கரநத்தத்தில் சுத்தியலாகப் பயன்படுத்தப்பட்ட புதிய கற்கால கருவி ஒன்று கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது. மிக அரிதாகவே புதிய கற்கால கருவிகள் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன. ஆகவே, இவ்விடத்தில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தங்களின் தேவையின் பொருட்டு புதிய கற்கால கருவிகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தி இருக்கக்கூடும் என்பதை அறிய முடிகிறது.

சுமாா் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கருவி காலம் முதல் பெரும் கற்காலமான சங்க காலம் வரை தொடா்ந்து மக்கள் இங்கு வசித்து இருப்பதால், வைப்பாற்றங்கரைகளில் செழுமையான நாகரிகம் செழித்தோங்கி வளா்ந்து இருப்பதை அறிய முடிகிறது. மேலும் இந்தப் பகுதியில் பல்வேறு தொல்லியல் தொடா்பான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT