மாநில அளவிலான தடகளப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா் வசந்தகுமாா், திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற 63-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் (போல் வால்ட்) பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.
இந்த மாணவரை கிராம மக்கள், உடற்கல்வி ஆசிரியா் காா்த்திகேயன், பள்ளியின் செயலாளா் பாலாஜி, தலைவா் லட்சுமணன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.