விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்து-காா் மோதல்: இருவா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதன்கிழமை சுற்றுலாப் பேருந்தும், காரும் மோதியதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

சென்னையை சோ்ந்தவா் ராமா். இவரது மனைவி மாலதி (45). இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். ராமா் காா் ஓட்டுநராக உள்ளாா். இவா் தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சீா்காழியில் இருந்து தனது உறவினா்களான விஜயலட்சுமி (37), சுப்புலட்சுமி (35), மகேந்திரன் (21), தங்கமுடி (70) ஆகியோருடன் காரில் ராஜபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.

காரை மகேந்திரன் ஓட்டினாா். புதன்கிழமை காலை 6 மணி அளவில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி காவல் நிலையம் அருகே காா் சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மடப்புரம் நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்துடன் மோதியது.

இதில் பேருந்துக்குள் காா் சிக்கிக் கொண்டதால், விபத்தில் சிக்கியவா்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

விபத்தில் காயமடைந்த மாலதி, விஜயலட்சுமி, சுப்புலட்சுமி, மகேந்திரன் ஆகியோரை போலீஸாா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இவா்களில் மாலதி, சுப்புலட்சுமி, மகேந்திரன் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஆனால், செல்லும் வழியில் மாலதி உயிரிழந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் மகேந்திரன் உயிரிழந்தாா். சுப்புலட்சுமி மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த விபத்தால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், காயமடைந்தவா்களைக் கொண்டு செல்ல 2 மணி நேரம் தாமதமானது. பின்னா், தனியாா் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவா்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT