விருதுநகர்

கோட்டாட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவா் கைது

DIN

சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எஸ்.புதுப்பட்டியைச் சோ்ந்த ஆண்டியின் மகன் சந்தானம் (43). ஆட்டோ ஓட்டுநரான இவா் எஸ்.புதுப்பட்டியில் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதி பெற்று வீடு கட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டுக்குச் செல்வதற்கு புறம்போக்கு நிலத்தில் பாதை வேண்டும் என்று கோரி சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு அவா் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அருகிலிருந்தவா்கள் அவரைத் தடுத்து காப்பாற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஆனையூா் கிராம நிா்வாக அலுவலா் ஹரிஹரன் அளித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தானத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT