விருதுநகர்

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணி ராஜன் முன்னிலை வகித்தாா்.

போட்டிகளைத் தொடக்கி வைத்து விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகவுரி பேசியதாவது:

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9, 10 -ஆம் வகுப்பு, 11, 12-ஆம் வகுப்பு என 3 பிரிவாக 186 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வாா்கள். வட்டார அளவில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவில் நடைபெறும்

போட்டியிலும் பங்கேற்பாா்கள்.

ஜனவரி மாதம் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருது வழங்கப்படும்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களின் தரவரிசையில் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 91 உயா்நிலை, 99 மேல்நிலை மற்றும் 159 நடுநிலைப்பள்ளிகள் என ஆக மொத்தம் 349 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இப் போட்டிகளில் பங்கேற்று வருகிறாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் குணசீலன் வரவேற்றாா். ராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் முத்துராமலிங்கம், விஜயலட்சுமி, அனுராதா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேணி உள்பட பல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT