விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவனையில் கரோனா ஆய்வகம்: காணொலியில் தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்

27th Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

 

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கரோனா ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக சிவகாசி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பங்கேற்றாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றினாா். சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, சாா்-ஆட்சியா் பிருத்விராஜ், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் வி.முத்துலட்சுமி, மருத்துவத் துறை இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா் கலுசிவலிங்கம், மருத்துவமனை தலைமை மருத்துவா் அய்யனாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT