சிவகாசி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவா் பிடிபட்ட நிலையில் மேலும் 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகன் (30). இவருக்கும், இவரது சகோதரா்களுக்கும் சொத்தை பிரிப்பது தொடா்பாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை முருகனின் சகோதரா்கள் விநாயகமூா்த்தி (25), மணிகண்டன் (29), முத்தீஸ்வரன் (40) மற்றும் இரு சிறுவா்கள் சோ்ந்து முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதில் லேசான காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து முருகனின் மனைவி இந்திராதேவி அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தீஸ்வரனை கைது செய்தனா்.
மேலும், இதில் தொடா்புடைய மணிகண்டன், விநாயகமூா்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.