ராஜபாளையம் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள முடங்கியாறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்தி கலை மன்றம், அய்யனாா் கோவில் பகுதிகள், ராஜூக்கள் கல்லூரி பகுதிகள், மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், சோமையாபுரம், சம்பந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்ப்பட்டி தெரு, பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடா் சாலை, திரௌபதி அம்மன் கோவில் தெரு, அரசு மகப்பேறு மருத்துவமனை, ராம்கோ கல்லூரி, மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், பெரியடை பஜாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.