விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து மதுரை இளைஞா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்ததில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ஜவகா் மகன் ஷாருக் (25), ஏசி மெக்கானிக். இந்நிலையில், ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் பொன்விழா மைதானம் அருகே புதிதாக தனியாா் திருமண மண்டபம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏசி பொருத்தும் பணியில் ஷாருக் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT