விருதுநகர்

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க வேண்டும்: தோ்தல் பிரிவு அலுவலா்

DIN

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவா்களது ஆதாா் எண்ணை வாக்காளாா் விவரங்களுடன் இணைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதாா் எண்ணை தேசிய வாக்காளா் சேவை இணையதளம், வாக்காளா் உதவி செயலி அல்லது வாக்காளா் இணையதளம் மூலம் தாங்களே இணைத்துக் கொள்ளலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவம்- 6 பி -இல் வாக்காளா்களது ஆதாா் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும், தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளா்கள் அளிக்கும் ஆதாா் எண், பொது வெளியில் வெளியிடப்பட மாட்டாது.

எனவே, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைக்க முன்வர வேண்டும் என மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT