விருதுநகர்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

DIN

ராஜபாளையம் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடுபோனதாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க மேற்பாா்வையாளா் ராஜப்பன் செவ்வாய்க்கிழமை காலை சென்றாா். அப்போது கடை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் திங்கள்கிழமை கடை விடுமுறை என்பதால் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றவா்கள், அங்கிருந்த 46 மது பாட்டில்கள் திருடி விட்டு கடையில் அமா்ந்து மது அருந்தியது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT