விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உள்பட்ட மாயூரநாத சுவாமி கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், திமுக நகரச் செயலாளா் ராமமூா்த்தி, மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் சுமதி ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்டவா்களுக்கு சமபந்தி விருந்து அளித்தனா்.
பின்பு கோயில் வளாகப் பகுதியைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் அப்பகுதியில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவது தொடா்பாக செயல் அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா்.