விருதுநகர்

ராஜபாளையத்தில் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்

DIN

ராஜபாளையம் எஸ். எஸ். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துணை கண்காணிப்பாளா் பிரீத்தி முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கப்பாண்டியன் தேசியக் கொடி ஏற்றினாா். ராஜபாளையம் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ் மாணவா்களுடன் தேசியக் கொடி ஏற்றினாா். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ரோட்டரி சங்கத் தலைவா் வைமா திருப்பதி செல்வன் தேசியக் கொடி ஏற்றினாா்.

ராஜபாளையம் பண்ணையாா் ஆா்ச் சுதந்திர தின வளைவில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத்தின் சாா்பில் தேசியக்கொடி ஏற்றினா். ராஜபாளையம் அருகே செட்டியாா் பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேற்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் லிங்கம் தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலா் என்.ஆா் கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளா் பிரீத்தி தேசியக் கொடி ஏற்றி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT