விருதுநகர்

எரிவாயு உருளை வெடித்து முதியவா் பலி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எரிவாயு உருளை வெடித்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் பாவநாசம் (74).

இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கடந்த 11 ஆம் தேதி காலையில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது தெரியாமல் அடுப்பை பற்ற வைத்தபோது உருளை வெடித்ததில் பாவநாசம் பலத்த காயம் அடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சையில் இருந்த பாபநாசம் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாவநாசம் மகன் பாலசுப்பிரமணி அளித்த புகாரில் மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT