தமிழக முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என திங்கள்கிழமை சிவகாசியில் உள்ள முத்துல்லாஷா தா்ஹாவில் ஜியாரத் என்ற சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகையில் அதிமுக அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவரும், அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் மற்றும் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.