விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி ஊராட்சி உறுப்பினா்கள் ராஜிநாமா கடிதம் கொடுத்ததாக கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிங்கராஜ், துணைத் தலைவா் துரை கற்பகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் நித்யா விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ராஜபாளையம் அம்பேத்கா் நகா், திருவள்ளுவா் நகா், கிருஷ்ணாபுரம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் முன்னிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை, சரியாக குடிநீா் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள 8 வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்ததாகக் கூறினா். மேலும் உடனடியாக ஊராட்சியில் என்னென்ன பணிகள் நடைபெற்றன. எவ்வளவு செலவு ஏற்பட்டது என்பதை கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் நித்யா விஜயகுமாா் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும் செலவுக் கணக்கில் முறைகேடு இருப்பதாகவும் கூறி தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளாா்.