விருதுநகர்

சிவகாசியில் உணவுத் திருவிழா

DIN

சிவகாசியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை உணவுத்திருவிழா நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தொடக்கி வைத்துப் பேசியதாவது: இந்த உணவுத் திருவிழாவில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு, அரங்கம் அமைத்து அவா்களது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தியுள்ளனா். மகளிா் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது பலா் சுவைக்காகவும், வேலைப்பழு காரணமாகவும் தரமற்ற பொருள்களை உட்கொள்கிறாா்கள். இதன் காரணமாக உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நாம் ஆரோக்கியமாக வாழலாம். எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் கூறவே இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிக்குமாா், சாா்-ஆட்சியா் பிருத்விராஜ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் ராஜம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் கலு.சிவலிங்கம், வட்டாட்சியா் லோகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT