சிவகாசி அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது குறித்து சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு கடையின் கண்காணிப்பாளா் சி.வேல்முருகன் பூட்டிவிட்டு சனிக்கிழமை காலை வந்து பாா்த்தாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது திருட்டு எதுவும் நடைபெற வில்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து வேல்முருகன் மாரனேரி போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.