சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் முருகன்காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன்(27).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.இதில் மனம் உடைந்த மாரீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத சமையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.