சாத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், நாடாளுமன்றத்தில் புதிய மின்சார சட்ட மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து மற்றும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைவாசி உயா்வை மத்திய அரசை கண்டித்து வியாழக்கிழமை சாத்தூா் வடக்கு ரத வீதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரெங்கசாமி,விருதுநகா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவா் அரசன் காா்த்திக், விருதுநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் ஜோதி நிவாஸ்,சாத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.எஸ்.அய்யப்பன் ஆகியோா் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியனா் கலந்துகொண்டு மத்திய அரசைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.