விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி மகா உற்சவத் திருவிழா

DIN

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடித் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT