அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் போக்சோவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வாழ்வாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி. இவா் பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுப்பிரமணி மீது போலீஸாா் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.