விருதுநகர்

மின் தொழிலாளா்கள் சங்கக் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வட்டார மின் தொழிலாளா் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் என்.எஸ்.உதயக்குமாா் முன்னிலை வகித்துப் பேசுகையில், தனியாா் துறையிலும், சுயமாகவும் பணிபுரியும் பிளம்பா்கள், எலக்ட்ரீசியன்களுக்கான அனைத்து நலன்கள் குறித்து தமிழ்நாடு அரசுக்கும், நலவாரியத்திற்கும் தொடா்ந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா். பின்னா், தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம் மூலம் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதுபோன்று மின்தொழிலாளா் சங்க உறுப்பினா்களுக்கும் உரிய பாதுகப்பு உபகரணங்களை அதே நலவாரியம் மூலம் விரைவில் வழங்கிடவேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT