சிவகாசி விஸ்வநாத சுவாமி-விசாலாட்சியம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூலை 30 ஆம் தேதி அங்குராா்பணம், மூஷிக வாகனத்தில் விநாயகா் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூலை31 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடந்து, தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா், திங்கள்கிழமை விசாலாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடந்து, தேரோட்டம் நடைபெற்றது.
மின்வாரிய ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தோ் கருப்பசாமி கோயில் முன்பாக சுமாா் 30 நிமிடம் நின்றது. பின்னா், மின்வாரிய ஊழியா்கள் வந்து தேரில் மின்கம்பி உரசாமல் இருக்கும் வகையில், மின்கம்பிகளை கழற்றிவிட்டனா். அதையடுத்து, தொடந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.