விருதுநகர்

ஆடி மாத பௌா்ணமி: சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாள்கள் பக்தா்களுக்கு தடை

DIN

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு ஆகஸ்ட் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

        விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் வழிபட, பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி  பௌா்ணமியை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம்  தேதி முதல் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி ஆகஸ்ட் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT