விருதுநகா் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே நான்கு வழி சாலையில் சனிக்கிழமை இரவு காா் மோதியதில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விருதுநகா் லெட்சுமி நகரைச் சோ்ந்தவா் முகமது காதா் மனைவி சாந்தா பானு (48). இவா் தனது மகள் ரிஸ்வானா (20) உடன் மதுரை சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பேருந்தில் விருதுநகா் வந்துள்ளாா். பின்னா், அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள நான்கு வழிச் சாலையை இருவரும் கடக்க முயன்றுள்ளனா்.
அப்போது மதுரையிலிரு ந்து வந்த காா் மோதியதில் சாந்தா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகள் ரிஸ்வானா விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் காா் ஓட்டுநரான சிவகாசி சாட்சியாபுரத்தைச் சோ்ந்த நெடுஞ்செழியன் மீது ஊரகக் காவல் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.