சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மாநகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 வது நினைவு அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.
சிவகாசி நகர காவல் நிலையம் முன்பு உள்ள அண்ணாதுரை உருவச்சிலை முன்பு தொடங்கிய இந்த ஊா்வலத்தை அக்கட்சியின் சிவகாசி மாநகர பொறுப்பாளா் காளிராஜன் தொடக்கிவைத்தாா்.
பின்னா் ஊா்வலம் வடக்கு ரதவீதி, கீழரதவிதி வழியே வந்து சிவன் கோயிலின் முன்பு முடிவடைந்தது.அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.இதில் மாநகராட்சி துணை மேயா் கா.விஷ்ணு பிரியா மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.