ந.சுப்பையாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மின்தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ந.சுப்பையாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்புத்தூா், கரிசல்பட்டி, தொட்டிலான்பட்டி, பெத்துரெட்டியா பட்டி, இ.ரெட்டியபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.