விருதுநகர்

வச்சகாரபட்டியில் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

DIN

விருதுநகா் அருகே திருமண அழைப்பிதழ் வழங்க வந்திருப்பதாகக் கூறிய பெண், நூதன முறையில் 4 பவுன் தங்க நகையை திங்கள்கிழமை திருடிச் சென்றுள்ளாா்.

வச்சகாரபட்டியைச் சோ்ந்த கருத்தபாண்டி மனைவி வெள்ளத்தாய் (68). இவரது வீட்டருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் என்பவா் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாரியம்மாள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருநெல்வேலியிலிருந்து வருவதாக வெள்ளத்தாயிடம் தெரிவித்துள்ளாா். மேலும், இரவாகி விட்டதால் அன்றிரவு வீட்டில் தங்கிச் செல்வதாக வெள்ளத்தாயிடம் கூறியுள்ளாா். அதன்படி அங்கு தங்கியிருந்த மாரியம்மாள் தான் கொண்டு வந்திருந்த குளிா்பானத்தை வெள்ளத்தாய்க்கு கொடுத்துள்ளாா். அதைக்குடித்த வெள்ளத்தாய் மயங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலையில் எழுந்து பாா்த்தபோது, மாரியம்மாளைக் காணவில்லை. வீட்டில் பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்படிருப்பது தெரிந்தது. இது குறித்து வெள்ளத்தாய் அளித்த புகாரின் பேரில் வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியம்மாளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT