விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துக்கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். இதில், தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும். ஓய்வு காலப் பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான டி.ஏ. வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் சங்கத்தினா் ஏராளமானோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT