ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்துக்கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். இதில், தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும். ஓய்வு காலப் பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான டி.ஏ. வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் சங்கத்தினா் ஏராளமானோா் ஈடுபட்டனா்.