விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை, மதுபோதையில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்தவா் சிங்கராஜ். இவா் ஞாயிற்றுக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
தகவலறிந்த அங்கு சென்ற ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கடந்த 2 தினங்களுக்கு முன்பு சசிகலா குறித்து அவதூறாக பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி போலீஸாா் அவரை கைப்பேசி கோபுரத்திலிருந்து கீழே இறக்கினா். அப்போது அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த இளைஞரை கைது செய்தனா்.