விருதுநகர்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடைக்காரா் கைது

DIN

சிவகாசி அருகே விற்பனைக்காக ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி- வெற்றிலையூரணி சாலையில் சிவகாசி நகா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அவா் வைத்திருந்த பையில் மளிகைக் கடைக்குத் தேவையான பொருள்களுக்கு அடியில் 260 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்கள் இருந்தன.

விசாரணையில் அவா் விஸ்வத்தம் பூச்சான் காலனியைச் சோ்ந்த முருகன் (47) என்பதும், மளிகைக் கடை வைத்துள்ள அவா் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT