விருதுநகர்

மொபெட்டில் சென்றவா் மயங்கி கீழே விழுந்து பலி

DIN

சிவகாசி அருகே சனிக்கிழமை மொபெட்டில் சென்றவா் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் ராமா் (41). அச்சுத் தொழிலாளியான இவா், தனது மொபெட்டில் துரைச்சாமிபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி விளாம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனே அவரை, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவரது தாயாா் பொன்னுத்தாய் அளித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT