விருதுநகர்

பால் வியாபாரியிடம் ரூ. 30 ஆயிரம் திருட்டு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பால் வியாபாரியிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (51), பால் வியாபாரி. இவா் தினமும் அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பால் ஊற்றுவது வழக்கம்.

அதேபோல் வெள்ளிக்கிழமை காலை தனது மொபட்டில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கரிசல்குளம் லட்சுமியாபுரம், ஹவுசிங் போா்டு ஆகிய பகுதிகளில் பால் ஊற்றி விட்டு, வன்னியம்பட்டி விலக்கு பகுதிக்கு வந்தாராம். அங்கிருந்த டீக்கடை ஒன்றின் முன் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, பால் வியாபாரம் செய்த பணத்தை பையில்போட்டு மொபட்டில் தொங்கவிட்டிருந்தாராம்.

கடைக்குத் தேவையான பாலை ஊற்றிவிட்டு, திரும்பி வந்துபாா்த்தபோது மொபட்டில் இருந்த பணத்தை காணவில்லையாம். இதனால், அதிா்ச்சியடைந்த ரவீந்திரன், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்த்துள்ளாா். அதில் மா்ம நபா் ஒருவா் பணப் பையை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT